உதவிக் கரம்
தேடி,உரிமைக் குரல்
கொடுக்கும்
ஈழத் தமிழ் விழியில்
உதிரம்தான்
ஊற்றிடுதே!
தொல்லைகள் பல
தாண்டித்,தோட்டாக்கள் பல
தாங்கிப்
போராடும் விழி,
காக்கும் இமையிறண்டும்
மாண்டதோ?
உதிரத்தில் நடைபோட்டு,உரிமைக்குத் தடைபோடும்
அரக்கர்களின் அதிகாரம்
அளவின்றி
அதிகரிக்க
கடுகளவும் உயிர்
மதிக்கா,கடலளவு இராணுவத்தில்
இரும்புத் தொப்பிகளின் இறுகிய
இதயத்தில்,
இரக்கம்தான் மாண்டதோ??
(இது
போராடும் ஈழத் தமிழ் உயிர்களுக்குச் சமர்ப்பணம்......) -ராகவன்(த்வஜன்)