Wednesday, March 28, 2012

ஈழச் சுவடி 2


உதவிக்  கரம்  தேடி,உரிமைக்  குரல் கொடுக்கும்
ஈழத் தமிழ்  விழியில்  உதிரம்தான் ற்றிடுதே!
தொல்லைகள்  பல தாண்டித்,தோட்டாக்கள்  பல தாங்கிப்
போராடும்  விழி, காக்கும்  இமையிறண்டும்  மாண்டதோ?

உதிரத்தில்  நடைபோட்டு,உரிமைக்குத்  தடைபோடும்
அரக்கர்களின்  அதிகாரம்  அளவின்றி  அதிகரிக்க
கடுகளவும்  உயிர்  மதிக்கா,கடலளவு   இராணுவத்தில்
இரும்புத் தொப்பிகளின்  இறுகிய  இதயத்தில், இரக்கம்தான்  மாண்டதோ??
(இது  போராடும்  ஈழத்  தமிழ் உயிர்களுக்குச் சமர்ப்பணம்......)                                                                                                    -ராகவன்(த்வஜன்)

Wednesday, March 21, 2012

ஈழச் சுவடி....


எனது  இறுதி  உதிரத்தின்  ஈழக்காய்ச்சலில்  
                   -குளிர்காயும்  இரும்புத்தொப்பிகளே!
நீ  அடைத்த  இருட்டறையில்  எனதுரிமைக்குரல்  எதிரொலிப்பதைக் கேள்!!!
அனுப்பினேன்  அனுதினமும்  அஞ்சல்கள்  அன்னைக்கு
உதவிக்கரம்  நீட்டுபவர்  யவருமிலர்  இங்கெனக்கு!!
இரத்தத்தில்  ஊரிய  பலத்  தோட்டாக்கள்  துருப்பிடிக்க
எதிர்த்தேனே  ஆண்டுகளாய், இன்றா  நான்  உயிரிழக்க?
அள்ளித்தின்ன  பாக்கியமில்லை, எனதன்னை  மண்ணை
மற்றுமொரு  பிறவி  கண்டு  தொடுவேன்  உன்னை!!!
(இது  போராடும்  ஈழத்  தமிழ் உயிர்களுக்குச் சமர்ப்பணம்......
                                                                               -ராகவன்(த்வஜன்)