எனது இறுதி
உதிரத்தின்
ஈழக்காய்ச்சலில்
-குளிர்காயும்
இரும்புத்தொப்பிகளே!
நீ அடைத்த
இருட்டறையில்
எனதுரிமைக்குரல்
எதிரொலிப்பதைக்
கேள்!!!
அனுப்பினேன் அனுதினமும்
அஞ்சல்கள்
அன்னைக்கு
உதவிக்கரம் நீட்டுபவர்
யவருமிலர்
இங்கெனக்கு!!
இரத்தத்தில் ஊரிய
பலத்
தோட்டாக்கள்
துருப்பிடிக்க
எதிர்த்தேனே ஆண்டுகளாய்,
இன்றா நான்
உயிரிழக்க?
அள்ளித்தின்ன பாக்கியமில்லை,
எனதன்னை மண்ணை
மற்றுமொரு பிறவி கண்டு தொடுவேன் உன்னை!!!
(இது
போராடும் ஈழத் தமிழ் உயிர்களுக்குச் சமர்ப்பணம்......)
-ராகவன்(த்வஜன்)
-ராகவன்(த்வஜன்)
No comments:
Post a Comment