கரையாத கல்லுப்பாய் இதயத்தின்
துக்கம்
கார்மெகக் கண்ணிரண்டும் கண்ணீரில்
ததும்ப
விழிமழையில் துக்கத்தைக் கரைத்திடடா
தோழா!!
அடியெடுத்து வைக்கயிலே அழுகை ஓலம் கேட்டிடுதே
‘அழுதிட வா' என்றே
உன் இதயத்தைக் கூப்பிடுதே
கண்ணீரில் துக்கங்கள் கரைந்திடுமோ என்றென்ன
இமயம் போல் சுமயொன்று இமைகளிலே இறங்குதடா!!
சொந்தங்களும் சுற்றாரும் தலைவிரித்து அழுதிடவே
மூலையிலே உன் மௌனம் அதைத்தாண்டிக் கதறுதடா
"நீ என்ன விதிவிலக்கா?" என்று பலர் உனைக்கேட்க
இமைகளிலே நீ அடைத்த இருத்துளிநீர் பேசுதடா!!
காடுவரை சென்றிடவே உன் மனபாரம் தடைவித்தால்
சுடர் வைக்கத் தீப்பந்தம் கைகளில் யார் எந்திடுவார்?
இறுநொடி நீ இமைமூடி,உன் மனதைத் தேற்றிக்கொள்
விதிவிலக்காய் இல்லாமல்,தீப்பந்தம் எந்தச்செல்!!!
(Firstly,these lines are not intentionally
written,It was an emotional outbreak.Iwrote this for my friend’s Father to get
him back going on his life,when his Beloved Mother passed away…..)
-ராகவன்(த்வஜன்)
No comments:
Post a Comment