உணர்வில்லாமல் உடைத்தேரியும் உளியே!
சில்லாகச் சிதறிக் கதறும் என்
குரலைக் கேளாயோ?
கசிந்திடத்தான் கண்ணீரில்லை
உயிரில்லாப் பாறை என்றது ஓர் உயிர்
வலியுண்டு என்று
இயம்புகிறேன்
இன்று!!!
உனை வருத்தும்
நாள்
குறித்து
,நான் வருந்தா நாளில்லை
வலியின் கொடுமைக்கு
நானில்லை
விதிவிலக்கு
என் வாழ்நாளின்
குரல் கேட்கும் செவியெங்கே?
சிதைகின்றேன்
நான்!உன் தலைவிதியைச் செதுக்கித்தான்!!!
-ராகவன்(த்வஜன்)
No comments:
Post a Comment