சிறு பார்வையிலே பல
வருடப் பழக்கம் தந்தாய்
ஒரு வார்த்தையிலே வந்தென்னை
வருடிவிட்டாய்
உன் புன்னாகியில் புதியதொரு
நெருக்கம் தந்து
என்னுள் ஒரு புதிராய்
நீ அமைந்துவிட்டாய்!!
நீ போகும்வரை எனை
நின்று பார்க்கவைத்தாய்
என் வழக்கம் நீ
வந்து மாற்றிவைத்தாய்
உந்தன் ஆதிக்கம் அது
என்னை மாதிரிடாவே
உன்னை நினைக்கையிலே,உதடுகள்
தானாய் சிரிக்கிறதே!!!
கண்ணில் தெரிந்திடவே இது
காதல் இல்லையடி
நட்பைத் தாண்டியொரு புது
பயணம் தொடருதடி!!
இது எங்கே சென்றிடுமோ
எனக்கே தெரியவில்லை
உன்னைக் கண்ட நொடி,என் வாழ்வில் நகரவில்லை!!!
நம்மிடையே சிறியதொரு எடைவெளி உருவாக
கண்டேனே உன்னில் பல
மாற்றங்கள் புதிதாக
உன் ஆழ்மாநத்தின் அலைகளை
நான் ஆராய
சிதறியாதே என்னிதயம் தூளாக!!!
உன் சிரிப்பொலி கேட்டிடவே
நான் கோமாளி ஆனேனே
உந்தன் சிரிப்பினிலே அன்று எமர்ந்து போனேனே!!
இன்னும் எதற்காக என்னுடன்
பழகுகிறாய்
ஒரு ஏவல் நாய்ப்
போல,நான் உன் காலைச்
சுற்றிடவா?
உன் உருவம் தங்கியதே,எனது உள்ளக் கண்ணாடி
அது கற்கள் தாங்கிவிடும்
உன் சொற்கள் தாங்கிடுமோ?
கண்ணீர் விடுகையிலே,என்
கண்கள் கரைந்தனவே!
என் கைகள் இப்போதும் உன்னைத் தேடிடுதே!!!
-ராகவன்(த்வஜன்)
No comments:
Post a Comment